ஆளுமை:சேர்ச்சிலம்மா, ஜெயஶ்ரீ நவரெட்ணராஜா

From நூலகம்
Name சேர்ச்சிலம்மா, ஜெயஶ்ரீ நவரெட்ணராஜா
Pages செகராஜசிங்கம்
Birth 1950.12.16
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேர்ச்சிலம்மா, ஜெயஶ்ரீ நவரெட்ணராஜா (1950.12.16 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செகராஜசிங்கம். இவர் பாடசாலைக் காலங்களில் பல கலைநிகழ்வுகளில் பங்குபற்றியதுடன் தனது தந்தையின் வழிகாட்டுதலில் இசை, நடனம், நடிப்பு, சித்திரம் கவிதை ஆகிய துறைகளில் பங்காற்றினார். யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். யாழ்ப்பாணப் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவையின் நிர்வாக சபை உறுப்பினராக இருந்து கலைப்பணியாற்றியுள்ளார். இவரது திறமைக்காகக் கீதாரம் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 67