ஆளுமை:செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர்

From நூலகம்
Name செவ்வந்திநாததேசிகர்
Pages திருஞானசம்பந்ததேசிகர்
Pages சிவபாக்கிய அம்மையார்
Birth 1907
Pages 1937
Place கரணவாய்
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செவ்வந்திநாததேசிகர், திருஞானசம்பந்ததேசிகர் (1907 - 1937) யாழ்ப்பாணம், கரணவாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை திருஞானசம்பந்த தேசிகர்; தாய் சிவபாக்கிய அம்மையார். இவர் அக்காலத்தில் சுன்னாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிராசீன பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் கரணவாயிலில் வித்தியா விருத்திச் சங்கத்தையும் ஒரு வித்தியாசாலையும் ஆரம்பித்து நடாத்தி வந்தார்.

சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட கரவை வேலன் கோவையினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் பிரபந்தங்களைத் தொகுத்து அச்சேற்றியுள்ளார். இவரால் மாவைக் கந்தசாமி மும்மணிமாலை, நல்லூர் கந்தசுவாமிக் கோவை, தமிழ்மொழியாராய்ச்சி போன்ற நூல்கள் இயற்றப்பட்டது.


Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 197-199
  • நூலக எண்: 963 பக்கங்கள் 140-141
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 217-220