ஆளுமை:செல்லையா, பொன்னையா

From நூலகம்
Name செல்லையா
Pages பொன்னையா
Birth 1938.01.19
Place மீசாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, பொன்னையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. இவர் 1968 ஆம் ஆண்டு கொலைகாரன் என்ற நாடகம் மூலம் கலைத்துறையில் புகுந்ததுடன் சிறந்த நடிகனாகவும் நெறியாளனாகவும் மேடைப் பேச்சாளனாகவும் திகழ்ந்தார்.

இவர் காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும் மன்னாக்குடி மார்த்தாண்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சாரப் பிரசங்கி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 25