ஆளுமை:சுந்தரம், பெரியண்ணன்

From நூலகம்
Name சுந்தரம்
Pages பெரியண்ணன்
Birth 1890.07.23
Pages 1957.02.04
Place மடுகொல்லை
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரம், பெரியண்ணன் (1890.07.23 - 1957.02.04) மலையகம், மடுகொல்லையைச் சேர்ந்த அரசியல்வாதி. இவரது தந்தை பெரியண்ணன். தனது ஆரம்பக் கல்வியைத் தோட்டப் பாடசாலையில் ஆரம்பித்துக் கண்டி திரித்துவக் கல்லூரி பின்னர் கொழும்பு புனித தோமையர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். தொடர்ந்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறைக் கல்வியைப் பயின்று உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்று பி.ஏ.எல்.பி மற்றும் எம்.ஏ பட்டங்களைப் பெற்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்னம்பலம் இராமநாதன், டி. எஸ். சேனநாயக்கா ஆகியோருடன் இணைந்து இலங்கைத் தேசிய காங்கிரசை உருவாக்கியதுடன் தொழிலாளர் நல உரிமைகள் முன்னணி என்ற தொழிலாளர் அமைப்பை 1919 ஜூலையில் நிறுவினார். இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கி அதன் செயலாளராகப் பணியாற்றினார். 1939 ஆம் ஆண்டில் உருவான இலங்கை இந்தியர் காங்கிரஸ் அதன் பின்னர் உருவான இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 1931 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் ஹற்றன் தொகுதியில் போட்டியின்றித் தெரிவாகி அன்றைய அரசில் தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக 1936 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7652 பக்கங்கள் 25-28