ஆளுமை:சிவானந்தையர், சபாபதி ஐயர்

From நூலகம்
Name சிவானந்தையர்
Pages சபாபதி ஐயர்
Birth 1873
Pages 1916
Place பன்னாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தையர், சபாபதி ஐயர் (1873 - 1916) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, பன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சபாபதி ஐயர். இளமையில் அவ்வூரில் வாழ்ந்த புலவரொருவரிடம் கல்வி பயின்று கொண்டிருந்த இவர், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பதற்காக ஏழாலையிலுள்ள உயர்தரப் பாடசாலையொன்றுக்கு அனுப்பப்பட்டார்.

இவர் சிதம்பரத்தையடைந்து பச்சையப்ப முதலியாரால் நிறுவப்பட்ட ஆங்கிலப் பாடசாலையொன்றில் சில ஆண்டுகள் வரை பணியாற்றியதுடன் சிதம்பரத்தில் அக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சாத்திரியொருவரிடம் தருக்க சங்கிரக நூலை கற்றதுடன் தருக்கக் குடார தாலுதாரி எனப்பட்ட திருஞானசம்பந்த பிள்ளையவர்களின் உதவியோடு அவற்றுட் சிலவற்றை மொழிபெயர்த்து நியாயபோதினி, பதக்கிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் எனத் தமிழில் வெளியிட்டார். இவர் புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனி துதி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 136-139
  • நூலக எண்: 963 பக்கங்கள் 117-118