ஆளுமை:சிவப்பிரகாசம், செல்லையா

From நூலகம்
Name சிவப்பிரகாசம்
Pages செல்லையா
Pages தெய்வானை
Birth 1928.06.21
Place அளவெட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவப்பிரகாசம், செல்லையா (1928.06.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஓவியர், சிற்ப கலைஞர். இவரது தந்தை செல்லையா; தாய் தெய்வானை. ஆரம்பத்தில் திரு. ஏ. இராசையாவிடம் இக்கலைகளைப் பயின்ற இவர், 1952 ஆம் ஆண்டில் இருந்து 1966 ஆம் ஆண்டு வரை கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சித்திரம், சிற்பம் ஆகிய இரண்டினையும் கற்று Diploma in Art என்ற பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ் மத்திய கல்லூரியில் சித்திர ஆசிரியராகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சித்திர பாடத்துறையை ஆரம்பித்த போது அங்கும் சித்திர பாட விரிவுரையாளராகப் பணியாற்றினார். .

இவர் யாழ். மாநகரசபையில் இருக்கும் சேர்.பொன் இராமநாதனின் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட அல்பிறட் துரையப்பா சிலை, யாழ். முத்திரைச் சந்தியடியில் உள்ள சங்கிலியன் சிலை உட்பட இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் சிலைகளை அமைத்துள்ளார். இவர் ஜனாதிபதியின் தேசிய விருதான கலாபூஷணம் விருது உட்படப் பன்னிரண்டுக்கும் மேலான தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 594
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 245