ஆளுமை:சிவப்பிரகாசபண்டிதர், சங்கரபண்டிதர்
From நூலகம்
Name | சிவப்பிரகாசபண்டிதர் |
Pages | சங்கரப்பண்டிதர் |
Birth | 1864 |
Pages | 1916 |
Place | நீர்வேலி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவப்பிரகாசபண்டிதர், சங்கரப்பண்டிதர் (1864 - 1916) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப் பண்டிதர். இவர் தமது தந்தையிடம் தொல்காப்பியம், நன்னூல் முதலான தமிழ் இலக்கணங்களையும் இரகுவம்சம் முதலிய சமஸ்கிருத காவியங்களையும் முக்தபோதம், ஆசுபோதம் முதலிய சமஸ்கிருத வியாகரணங்களையும் நன்கு கற்றுக் கொண்டார்.
இவர் திருச்செந்தூர்ப் புராண உரை, சிவானந்த லகரித் தமிழுரை முதலான உரைகளும், பாலபாடம், பாலாமிர்தம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 3003 பக்கங்கள் 123
- நூலக எண்: 963 பக்கங்கள் 116
- நூலக எண்: 15417 பக்கங்கள் 109-110