ஆளுமை:சிவசுப்பிரமணியம், செல்லையா

From நூலகம்
Name சிவசுப்பிரமணியம்
Pages செல்லையா
Pages சின்னாச்சிப்பிள்ளை
Birth 1915.02.24
Pages 1999.11.04
Place விழிசிட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசுப்பிரமணியம், செல்லையா (1915.02.24 - 1999.11.04) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, விழிசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லையா; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் விழிசிட்டி தமிழ்க் கலவன் பாடசாலையில் (தற்போதைய சேர். கனகசபை வித்தியாசாலை) பண்டிதர் சி. கதிரிப்பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். தொடர்ந்து அளவெட்டி வடக்கு சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். 1930 ஆம் ஆண்டு கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிக்காகச் சேர்ந்து 1932 ஆம் ஆண்டு தனது பதினேழாவது வயதில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரானார்.

இவர் கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலை, தெல்லிப்பளை கிழக்கு சைவப்பிரகாச வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளதோடு பயிற்றப்பட்ட தமிழாசிரியர் தராதரப் பத்திரத்தையும் சித்திர பாடத்திற்குரிய தராதரப் பத்திரத்தையும் சங்கீத ஆசிரியர் தராதரப் பத்திரத்தையும் பெற்றுள்ளார். பல நூல்களை எழுதியுள்ள இவர், 1980 ஆம் ஆண்டில் நகுலகிரிப் புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். மேலும் 1988 இல் நகுலேஸ்வரர் பத்திரசக் கீர்த்தனைகள் என்னும் நூலைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். சிறுவர் பாடசாலையை நடாத்திக் கொண்டிருந்த இவர், குழந்தைகளுக்கான கவிதைகள் பலவற்றை விழிசைச் சிவம் என்ற புனைபெயருடன் பத்திரிகைகளில் எழுதி வந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 255-267