ஆளுமை:சிவகுருநாதன், இரத்தினதுரை

From நூலகம்
Name சிவகுருநாதன்
Pages இரத்தினதுரை
Birth 19331.10.07
Pages 2003.08.08
Place கந்தர்மடம்
Category ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன், இரத்தினதுரை (1931.10.07 - 2003.08.08) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஊடகவியலாளர். இவரது தந்தை இரத்தினதுரை. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மேற்படிப்புக்காகவும் தொழில் காரணமாகவும் கொழும்பில் பல காலம் வாழ்ந்தார். 1955 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாராளுமன்ற நிருபராகப் பணியாற்றிப் பாராளுமன்ற நிகழ்வுகளைப் பத்திரிகை மூலம் கொண்டு வர வழிவகுத்தார்.

1957 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையின் செய்தி ஆசிரியராகி 1961 ஆம் ஆண்டு முதல் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கையின் தேசியமட்டப் புதினத்தாள் வரலாற்றில் 33 வருடங்கள் பிரதம ஆசிரியராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. இலங்கைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை சபை ஆகியவற்றில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் இலங்கை நீதி அமைச்சினால் இலங்கை முழுவதற்குமான சமாதான நீதவானாக நியமனம் பெற்றவர். சிலகாலம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த பத்திரிகையாளர் சேவைக்கான விருது, சமூக மாமதி, தமிழ்மணி ஆகிய சிறப்புப் பட்டங்களைப் பெற்றுக் கொண்ட இவர், தமிழ் மக்களினால் செய்தி மன்னன் என அழைக்கப்பட்டார். இவர் இலங்கை அரசின் அதிவிசேட விருதான கலாசூரி விருதினைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 17
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 57-61