ஆளுமை:சின்னப்பிள்ளை, வைரவநாதர்

From நூலகம்
Name சின்னப்பிள்ளை
Pages வைரவநாதர்
Birth
Place சிறுப்பிட்டி
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னப்பிள்ளை, வைரவநாதர் யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வைரவநாதர். இவர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் சகோதர். இவர் இந்தியாவில் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றி இளைப்பாறிய பின் இலங்கைக்கு வந்து கல்வி விருத்திக்கான தொண்டுகள் பல புரிந்தார். இலங்கையில் நாவல் இலக்கியம் ஒரு நிறைவான உருவம் பெறும் வகையில் பல நாவல்களை முதன் முதலாக ஆக்கியளித்தவர்.

இவர் வீரசிங்கன் கதை, இரத்தின பவானி, விஜய சீலம் ஆகிய நாவல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் விஜயசீலம் ஈழ நாட்டின் வரலாற்றுடன் தொடர்புபட்ட விஜயனின் கதையாகும்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 123