ஆளுமை:சின்னத்துரை, கேசவப்பிள்ளை

From நூலகம்
Name சின்னத்துரை
Pages கேசவப்பிள்ளை
Pages தங்கம்மா
Birth 1931.05.31
Pages 1975.01.11
Place நீலாவணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை, கேசவப்பிள்ளை (1931.05.31- 1975.01.11) நீலாவணையைச் சேர்ந்த சித்த வைத்தியர், பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். இவரின் தந்தை கேசவப்பிள்ளை; இவரின் தாய் தங்கம்மா. மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்றார்.

இவர் தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாக ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் 1948 இல் எழுத்துலகில் பிரவேசித்தார். முதலில் பிராயச்சித்தம் என்ற சிறுகதையை 1952 இல் சுதந்திரனில் எழுதினார். பின்னர் நீலவாணன் கவிதைகள், வேளாண்மைக் காவியம், வழி, ஒத்திகை முதலான நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவர் 1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்துப் ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார்.

Resources

  • நூலக எண்: 10 பக்கங்கள் 61
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 122


வெளி இணைப்புக்கள்