ஆளுமை:சதாசிவ ஐயர், தியாகராஜ ஐயர்

From நூலகம்
Name சதாசிவ ஐயர்
Pages தியாகராஜ ஐயர்
Pages செல்லம்மாள்
Birth 1882
Pages 1950
Place அளவெட்டி
Category எழுத்தாளர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவ ஐயர், தியாகராஜ ஐயர் (1882 - 1950) யாழ்ப்பாணம், அளவெட்டியில் பெருமாக்கடவையைச் சேர்ந்த எழுத்தாளர், புலவர். இவரது தந்தை தியாகராஜ ஐயர்; தாய் செல்லம்மாள். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை படைத்தவராய் திகழ்ந்த இவர், கல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் எவ். ஏ. தேர்வில் முதற் பிரிவில் சித்தியடைந்தார். மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1910 ஆம் ஆண்டு தொடக்கம் கல்வித் திணைக்களத்தில் வித்தியாதரிசியாகவும் 1927 ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி வித்தியாதரிசியாகவும் கடமையாற்றினார்.

யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமானது இவருடைய அயரா உழைப்பினால் 1921 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. தேவி தோத்திர மஞ்சரி, இருதுசங்கார காவியம், தேவிமானச பூசை அந்தாதி, பெருமாக்கடவை பிள்ளையார் இரட்டை மணிமாலை, தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். கரவை வேலன் கோவை, வசந்தன் கவித்திரட்டு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களை வெளியீடும் செய்துள்ளார்.

சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசு அவருக்கு முகாந்திரம் என்னும் கௌரவப் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 100-101

வெளி இணைப்புக்கள்