ஆளுமை:சச்சிதானந்தம், இரத்தினம்

From நூலகம்
Name சச்சிதானந்தம்
Pages இரத்தினம்
Birth 1953.11.14
Place காங்கேசன்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தம், இரத்தினம் (1953.11.14 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். கூத்து, சிந்துநடைக்கூத்து, நாடகம், திரைப்பட இயக்கம், காவடி போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், 1960 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இந்தியாவில் சென்னையில் Action - Direction என்பவற்றில் இவர் சித்தியடைந்துள்ளார்.

நூற்றுக்கணக்கான தென்மோடி, வடமோடி நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ள இவர், வளர்பிறை மன்றத்தினை உருவாக்கி அதனூடாக ஏழையின் வாழ்வு, ஆனந்தக் கண்ணீர், பாவமன்னிப்பு, சிங்கப்பூர் சுப்பன், உண்டியல், ஒரு சுமைதாங்கி சுமையாகின்றது, கேள்விகள், மனக்கோலம், அழியாத கோலங்கள், அகலாத நினைவுகள், பத்துரூபா, அம்மா, ஆரவல்லி சூரவல்லி நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். அத்தோடு இந்தியாவிலும் இராமநாதபுரத்தில் அனார்கழி, திருமறையின் திறவுகோல், கல்லறையே கதவை மூடாதே நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார்.

இவரது திறமைக்காகத் தென்புலோலியூர் வள்ளுவன் முத்தமிழ் கலா மன்றத்தினால் நடிப்புச் செம்மல் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 152-153