ஆளுமை:குமாரசுவாமிக்குருக்கள், சபாபதிக் குருக்கள்
From நூலகம்
Name | குமாரசுவாமிக் குருக்கள் |
Pages | சபாபதிக் குருக்கள் |
Pages | தங்கம்மா |
Birth | 1886.11.16 |
Pages | 1971 |
Place | யாழ்ப்பாணம் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசுவாமிக் குருக்கள், சபாபதிக் குருக்கள் (1986.11.16 - 1971) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சபாபதிக் குருக்கள்; இவரது தாய் தங்கம்மா. இவர் நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடமும் அவரது மகன் சிவப்பிரகாச பண்டிதரிடமும் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்றதோடு ஶ்ரீமத் த. கைலாசபிள்ளை, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் ஆகியோரிடம் தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் கற்றுள்ளார்.
விநாயகபரத்துவம், முத்திலட்சணம், ஆலய சேவை, சிவபூசை விளக்கம், சைவப் பிரகாசிகை 1, 2, 3, 4, 5, முப்பொருள் விளக்கம் போன்ற 18 நூல்களைத் தமிழில் எழுதியுள்ள இவர், வடமொழியில் சிவாகம சேகரம், சிவாலய பிரதிட்டாவிதி நூல்களை எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 16946 பக்கங்கள் 89