ஆளுமை:கந்தவனம், விநாயகர்

From நூலகம்
Name கந்தவனம்
Pages விநாயகர்
Pages சின்னம்மா
Birth 1933
Place சாவகச்சேரி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தவனம், விநாயகர் (1933 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், அதிபர், எழுத்தாளர். இவரது தந்தை விநாயகர்; தாய் சின்னம்மா. இவர் சாவகச்சேரி றிபேக் கல்லூரி, தமிழ்நாடு கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பாடசாலைக் காலத்தில் எழுத்துலகில் பிரவேசித்த இவர், அக்காலத்தில் 'ஒன்றரை ரூபாய்' என்ற நாவலை வெளியிட்டார். இவரது கவிதை 1952 இல் ஈழகேசரியில் வெளியானதைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன் உட்படப் பல பத்திரிகைகளிலும் வெளியாகின. இவர் இலக்கியம், கவிதை, நாவல், வரலாறு முதலான பல்துறைசார்ந்த நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய உலகம் (1964), ஏனிந்தப் பெருமூச்சு (1967), கீரிமலையினிலே (1969), பாடுமனமே (1972), கவியரங்கிற் கந்தவனம் (1972), சிட்டுக்குருவி முதலானவை இவரது கவிதை நூல்கள். “நுணாவிலூர்” இவரது வரலாற்று நூல் ஆகும். கூனியின் சாதனை (1970), முறிகண்டிப்பத்து (1964), குரும்பசிட்டி விநாயகர்பத்து (1971), நல்லூர் நூற்பது (1971), தங்கம்மா நூன்மணிமாலை முதலான பல நூல்களையும் தந்துள்ளார.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 166-172
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 360