ஆளுமை:கண்ணதாசன், தம்பையா ஐயர்
From நூலகம்
Name | கண்ணதாசன் |
Pages | தம்பையா ஐயர் |
Birth | 1963.06.02 |
Place | மானிப்பாய் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கண்ணதாசன், தம்பையா ஐயர் (1963.06.02 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பையா ஐயர். இவர் அ. தட்சணாமூர்த்தி, கரவெட்டி அமரர் கே. வி. நற்குணம், மாதனை அண்ணாவியார் ந. சிவசுப்பிரமணியம் போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்று, தனது பதின்மூன்றாவது வயதில் முதன் முதலாக நாடகத்துறையில் தடம் பதித்து 25 வருடங்களுக்கு மேலாக கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
இவர் சீதை, சந்திரமதி, முத்துக்குமாரி, கண்ணகி, சாவித்திரி, பாஞ்சாலி போன்ற பெண் பாத்திரங்களிலும் சத்தியவான், நாரதர் போன்ற ஆண் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவரது சேவைக்காகக் கலாஜோதி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 138