பேச்சு:முறிந்த பனை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் முதற்பாகம் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப் படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை- ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி இக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


பதிப்பு விபரம்
முறிந்த பனை: இலங்கையில் தமிழர் பிரச்சினை: உள்ளிருந்து ஒரு ஆய்வு. ராஜினி திரணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 4: பிரஸ் மேற், 90/7 லோரிஸ் வீதி)

xvi + 576 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ. (ISBN 955 944700 9)

-நூல் தேட்டம் (# 1947)

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:முறிந்த_பனை&oldid=126294" இருந்து மீள்விக்கப்பட்டது