பேச்சு:சமூக மாற்றத்துக்கான அரங்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

மக்கள் போராட்டத்தில் பண்பாடு மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. மானுடநேயம் மிக்க பண்பாடு நிலவாத ஒரு சமூகத்தில் மானுட விடுதலைக்கான போராட்டம் அதன் முழு வீச்சை அடையமுடியாது. மானுடப் பண்பற்றதாகி விட்ட நமது ஒடுக்குமுறைப் பண்பாட்டை மானுடப்படுத்துகின்ற பணியை ஊக்குவிக்கும் ஒரு கருவியாக அரங்கைப் பயன்படுத்த முடியுமா என்ற ஆசிரியரின் சிந்தனையின் விளைவே இந்நூலாகும்.


பதிப்பு விபரம்
சமூக மாற்றத்துக்கான அரங்கு.க.சிதம்பரநாதன். சென்னை 2: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1994. (சென்னை41: சூர்யா அச்சகம்) 157 பக்கம். விலை: இந்திய ரூபா 18. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (297)