ஆளுமை:வைத்தீஸ்வர ஐயர், சபாபதி ஐயர்
Name | வைத்தீஸ்வர ஐயர் |
Pages | சபாபதி ஐயர் |
Birth | 1916 |
Pages | 1990 |
Place | நல்லூர் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைத்தீஸ்வர ஐயர், சபாபதி ஐயர் (1916 - 1990) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை சபாபதி ஐயர். இவர் இளம்பராயத்தில் பாடசாலைக் கல்வியுடன் இசைப்பயிற்சியையும் பெற்றதுடன் இந்தியக் கலைஞர்களான வீணை வித்துவான் துரைசாமி ஐயர், சபேச ஐயர் ஆகியோரிடம் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம் ஆகிய பல்லிசைக் கருவி இசைகளை உரிய முறையில் கற்றுத் தேர்ந்து வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தார். இவர் உடுவில் மகளிர் கல்லூரி, பருத்தித்துறைப் பெண்கள் கல்லூரி, ஹாட்லிக் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இசை ஆசிரியராகி வாய்ப்பாட்டு இசை, புல்லாங்குழல், வீணை ஆகிய இசைகளைக் கற்பித்தார். இவர் ஏழுதந்தி வயலின் வாத்தியத்தை இசைக்கக்கூடியவராக விளங்கினார்.
இவர் தனது இருபதாவது வயதிலிருந்து பலமேடைகளில் இசைக் கச்சேரிகள் செய்தும் வயலின், ஆர்மோனியம், புல்லாங்குழல் ஆகியவற்றைப் பக்கவாத்தியமாக இசைத்தும் தனி இசையாக வழங்கியும் வந்தார். அக்காலத்தில் இந்தியக் கலைஞர்களான மைசூர் சௌடையா, சேதுராமையா ஆகியோர்களே ஏழு தந்தி வயலினை வாசிக்கும் ஆற்றல் பெற்று விளங்கினார்கள். இவர் அவர்களுக்கீடாக ஏழு தந்தி வயலினை ஈழத்தில் இசைக்கும் ஒரேயொரு கலைஞனாக விளங்கினார் எனப்படுகின்றது.
Resources
- நூலக எண்: 7474 பக்கங்கள் 45-48
- நூலக எண்: 7571 பக்கங்கள் 77