ஆளுமை:வேதநாயகம், பாவிலுப்பிள்ளை
From நூலகம்
Name | வேதநாயகம் |
Pages | பாவிலுப்பிள்ளை |
Birth | 1948.10.18 |
Place | நவாலி |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதநாயகம், பாவிலுப்பிள்ளை (1948.10.18 - ) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. க. யோ. ஆசிநாதனிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1968 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
கவிதை, தாளலயம், வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல்கள், சிறுகதைகள், வாழ்த்துப்பாக்கள் போன்றனவற்றைக் கேட்டவுடன் எழுதும் திறமையுடைய இவர், பிரதேச, மாவட்ட ரீதியாக நடத்தப்படும் பல கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளார். இவர் பல்கலை மன்னன், கலையரசு ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 224