ஆளுமை:வாஸ், கே. வீ. எஸ்.
| Name | வாஸ், கே. வீ. எஸ். | 
| Birth | 1912 | 
| Pages | 1988.08.30 | 
| Place | தமிழ்நாடு, கும்பகோணம் | 
| Category | ஊடகவியலாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
வாஸ், கே. வீ. எஸ் (1912 - 1988.08.30) தமிழ்நாடு, கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர். வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்டவர். இவர் திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார்.
இவரது கத்திச்சங்கம் என்ற சிறுகதை 15 வயதில் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. வீரகேசரி தினசரிப் பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற தொடர்கதைகளை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதியதுடன் பல ஆன்மீகக் கதைகளும் எழுதி ஈழத்துப் பத்திரிகைத்துறையில் பெரும்பங்கு வகிப்பவர். இவர் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் புத்தகத்தில் 'வான்மீகி' என்ற புனைபெயரில் இலங்கை வரலாற்றை 'ஈழத்தின் கதை' என்ற பெயரில் எழுதியவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பாப்புலர் மேகசீன் (Popular Magazine) என்ற இதழை நடத்தினார்.
சென்னை த இந்து பத்திரிகைக்கும் மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கும் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார்.
Resources
- நூலக எண்: 4428 பக்கங்கள் 477-478