ஆளுமை:பேரின்பநாதன், ந.
நூலகம் இல் இருந்து
பெயர் | பேரின்பநாதன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | விரிவுரையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பேரின்பநாதன், ந. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட விரிவுரையாளர். இவர் பொருளியற் துறையில் சிருஷ்டி கர்த்தாவாகத் திகழ்ந்தார்.
கேள்வியும் நிரம்பலும், நெகிழ்ச்சிக் கோட்பாட்டின் முக்கியத்துவம், வர்த்தகமாற்று வீதம், கோட்பாடும் நடைமுறையும், இலங்கைப் பொருளாதார வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். பொருளியலாளன் என்னும் சஞ்சிகையை நீண்ட காலம் நடத்திவரும் இவர், கனடாவிலிருந்து வெளிவரும் 'பூவரசம் பொழுது' என்ற ஆண்டு மலரிலும் கட்டுரைகளை எழுதிவருகின்றார். இவர் எழுதிய 'புங்குடுதீவின் பொருளாதாரம் வரலாற்று ரீதியான நோக்கு' என்ற கட்டுரை, இவருடைய ஊர் அபிமானத்தை எடுத்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 177