ஆளுமை:தாமோதரம்பிள்ளை, கதிர்காமர்

From நூலகம்
Name தாமோதரம்பிள்ளை
Pages கதிர்காமர்
Pages வள்ளியம்மை
Birth 1921
Place புங்குடுதீவு
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமோதரம்பிள்ளை, கதிர்காமர் (1921- ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமர். இவரது தாய் வள்ளியம்மை. இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைப் பயின்று சங்கீத பூஷணமாய் 1948 ஆம் ஆண்டு முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திலும் 1956 ஆம் ஆண்டு முதல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் 25 ஆண்டுகளாகச் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றி அவ்வித்தியாலய வளர்ச்சிக்கும் மாணவர் முன்னேற்றத்திற்கும் உழைத்தார்.

புங்குடுதீவு கண்ணகையம்மன் ஆலயத்தை மு.முத்தையா பிள்ளை புனருத்தாரணம் செய்து வைத்திருந்த வேளையில் இவர், அக்கோவில் நிர்வாக சபையின் பொருளாளராக, செயலாளராக இருந்து பல தொண்டுகள் செய்தார். இவர் சிறந்த விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 193