ஆளுமை:தம்பிமுத்துப்பிள்ளை, சந்தியாகுப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர் |
தந்தை | சந்தியாகுப்பிள்ளை |
பிறப்பு | 1857.08.06 |
இறப்பு | 1921/1934 |
ஊர் | அச்சுவேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பிமுத்துப்பிள்ளைப் புலவர், சந்தியாகுப்பிள்ளை (1857.08.06 - 1921) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஈழநாட்டின் முதல் நாவலான ஊசோன் பாலந்தை கதையினை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891 ஆம் ஆண்டிற் பதிப்பித்ததுடன் மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை முதலான நாவல்களையும் பதிப்பித்துள்ளார். மேலும் இவரால் அழகவல்லி, சுந்தரன் செய்த தந்திரம் ஆகிய நாவல்களும் எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகியனவும் இயற்றப்பட்டவை ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 147
- நூலக எண்: 8382 பக்கங்கள் 1-57