ஆளுமை:சுப்பிரமணியம், ஆ. (ஓவியர்)
நூலகம் இல் இருந்து
பெயர் | சுப்பிரமணியம் |
பிறப்பு | 1925 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், ஆ. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மணியம் என்ற புனைபெயரில் ஓவியங்கள் வரைந்தார்.
இவரது ஓவியங்களில் ஒன்றான சிறுமியர் என்ற ஓவியம் இலங்கைக் கலைக்கழகத்தின் பாராட்டைப்பெற்றுச் சீனாவிற்குக் கண்காட்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இவர் கொழும்பு அரசினர் கலைக் கல்லூரியில் பயின்றார். இவர் சித்திரத்தின் இயல்பான கூறுகளாக இரேகை லயம், வடிவங்களின் கூட்டு, வெளி, ஒளியும் நிழலும், வர்ணம், போன்ற ஐந்து அம்சங்களையும் குறிப்பிடுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 22-23