ஆளுமை:சுப்பிரமணியம், அருளம்பலம்

From நூலகம்
Name சுப்பிரமணியம்
Pages அருளம்பலம்
Birth 1913.04.10
Pages 2007.07.15
Place புங்குடுதீவு
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், அருளம்பலம் (1913.04.10- 2007.07.15) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். இவரது தந்தை அருளம்பலம். புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய இவர் அப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவராகவும் புங்குடுதீவின் கல்வி, சமய, சமூகச் சேவைகளில் முன்னின்று உழைத்தவராகவும் காணப்பட்டார்.

தம்பிமுத்து ஆசிரியர் என்ற புனைபெயரில் புகழ்பெற்ற இவர், புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து அக்கோவிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இவர் புங்குடுதீவில் இணக்க சபை செயற்பட்டுக் கொண்டிருந்த பொழுது அதன் தலைவராக இருந்து கிராமமக்கள் பலரின் சிக்கல்களை நீதியாகத் தீர்த்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200-200A