ஆளுமை:சுப்பிரமணியன், தாமோதரம்பிள்ளை

From நூலகம்
Name சுப்பிரமணியன்
Pages தாமோதரம்பிள்ளை
Pages பரஞ்சோதி
Birth 1937.11.22
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியன், தாமோதரம்பிள்ளை (1937.11.22 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை; தாய் பரஞ்சோதி. திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி, கொழும்புத்துறை ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ள இவர், 15 வருடங்கள் உதவி ஆசிரியராகவும் 22 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

1954 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் நேர்த்திக்கடன் என்ற தலைப்பில் இவரது முதலாவது ஆக்கம் வெளியானது. இவர் சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என்பன எழுதி வருவதுடன் ஓவியம் வரைவதிலும் ஆற்றல் கொண்டவராக விளங்கினார். இவரது விடாமுயற்சி, சந்தனக்குச்சு (சிறுகதைத் தொகுப்பு), இதயங்கள் அழுகின்றன (நாவல்), நடையிலே மூன்று நாட்கள் (குறுநாவல்) வெளிவந்துள்ளது. இவர் மூத்த கலைஞர் விருது, கலாபூஷணம் விருது, ஆளுநர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 8582 பக்கங்கள் 04