ஆளுமை:சுந்தரலிங்கம், சின்னக்கண்டு

From நூலகம்
Name சுந்தரலிங்கம்
Pages சின்னக்கண்டு
Birth 1946.09.28
Place வல்வெட்டித்துறை
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம், சின்னக்கண்டு (1946.09.28 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னக்கண்டு. இவர் ஊடகத்துறையில் சுந்தர், ஈழத்தீபன், சுபைதா, ஆருடவாகனன், ஜேனலிசா, ஓவியன், பல்கலைவேந்தன், வல்வைச்சிவன், வல்லழகனார், சுனாமி சுந்தர் ஆகிய புனைபெயர்களில் சோதிடம், அறிவியல், சித்திரம், ஆராய்ச்சி போன்ற பல துறைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கனிஷ்ட பிரிவில் கற்கும் பொழுது பாடசாலைச் சஞ்சிகைகளில் எழுதத் தொடங்கிய இவர், தனது சொந்த வெளியீடாக கலைக்கன்னி என்னும் மாதாந்த சஞ்சிகையை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பனம்பொருட்களால் நடராஜர் சிலை, நடனமாடும் பொம்மை, ஒருகால் மடித்த கொக்கு, தவம் புரியும் முனிவர் சிலை, ஐந்தூரிய மலர்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.

இவர் 2008 இல் வடமராட்சித் தெற்கு - மேற்குக் கலாச்சாரப் பேரவையால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 247-248