ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
பெயர் | கைலாசநாதன் |
தந்தை | கோபாலபிள்ளை |
பிறப்பு | 1956.02.24 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசநாதன், கோபாலபிள்ளை (1956.02.24 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை கோபாலப்பிள்ளை. இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1982 இல் வெளியேறி, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45