ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை

From நூலகம்
Name குமாரசுவாமிப்புலவர்
Pages அம்பலவாணபிள்ளை
Pages சிதம்பரவம்மையார்
Birth 1855.01.18
Pages 1922.03.23
Place சுன்னாகம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமிப்புலவர், அம்பலவாணபிள்ளை (1855. 01.18 - 1922. 03.23) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை அம்பலவாணபிள்ளை; தாய் சிதம்பரவம்மையார். இவர் இளமைக் காலத்தில் மல்லாகம் ஆங்கில வித்தியசாலையிலும் அவ்வூரில் வாழ்ந்த முருகேச பண்டிதரிடமும் கல்வி பயின்றார்.

1878 ஆம் ஆண்டு சி. வை. தாமோதரம்பிள்ளை ஏழாலையில் தான் நிறுவிய தமிழ்ப் பாடசாலைக்கு இவரை ஆசிரியராக நியமித்தார். சிறிது காலத்தின் பின் இவரே இப்பாடசாலையின் தலைமையாசிரியராக விளங்கினார். பின்னர் ஆறுமுக நாவலரால் நிறுவப்பட்ட வண்ணார்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.

மேகதூதக் காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதிவெண்பா ஆகியவை இவர் சமஸ்கிருதத்திலிருந்து மொழிப்பெயர்த்த நூல்கள். தமிழ்ப் புலவர் சரிதம், வினைப்பகுபத விளக்கம், சிசுபால சரிதம், இதோபதேசம், இலக்கியச் சொல்லகராதி, சிவதோத்திரக் கவித்திரட்டு, இரகுவம்ச சரிதாமிர்தம், ஏகவிருத்த பாரதாதி, மாவைப் பதிகம், இலக்கண சந்திரிகை, கலைசைச் சிலேடை வெண்பா - அரும்பதவுரை, கம்பராமாயணம் - பாலகாண்டம் - அரும்பதவுரை, நீதிநெறி விளக்கம் - புத்துரை, தண்டியலங்காரம் - புத்துரை, யாப்பருங்கலக்காரிகை - புத்துரை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 139-157
  • நூலக எண்: 963 பக்கங்கள் 88-90
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 106-117
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 36