ஆளுமை:கனேஸ், கந்தையா

From நூலகம்
Name கனேஸ்
Pages கந்தையா
Pages பொன்னம்மா
Birth 1951.06.05
Place கிளிநொச்சி, சோரன்பற்று
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனேஸ், கந்தையா (1951.06.05 - ) கிளிநொச்சி, சோரன்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை கந்தையா; தாய் பொன்னம்மா. சோரன்பற்று தேசங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடைபெற்ற திருவிழாக்களில் பல கூத்துக்களில் அண்ணாவியாராக திகழ்ந்தது கனேஸ் அண்ணாவியார் ஆகும்.

உருத்திரபுரம் சிவன் கோயில், கண்டாவளை, புளியங்குளம், கிளாலிவீரபத்திரர், வழிவிடு முருகன், புலோப்பளை, கச்சாய்அம்மன், நவீன் வழி அம்மன் போன்ற இடங்களில் இவர் காத்தவராயன் கூத்து களை மேடையேற்றியவர் . 1988 ல் கோவலன் கண்ணகி இசை நாடகத்தை மேடை ஏற்றியவர் .1972 ஆம் ஆண்டில் சரஸ்வதி கலா மன்றத்தின் ஸ்தாபகராக கடமையாற்றியுள்ளார்.