ஆளுமை:கணேசலிங்கம், சிவகுரு
From நூலகம்
Name | கணேசலிங்கம் |
Pages | சிவகுரு |
Birth | 1960.05.21 |
Place | அல்வாய் |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணேசலிங்கம், சிவகுரு (1960.05.21 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவகுரு. இவர் மு. பொன்னையா, மு. செ. விவேகானந்தன், வே. ஐயாத்துரை போன்றோரிடம் நாடகக் கலையைப் பயின்றார்.
இவர் அல்வாயூர் கவிஞர் நாடகமன்றம், அல்வாயூர் மனோகரா நாடக சபா என்பவற்றுடன் இணைந்து நடாத்திய அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, ஶ்ரீவள்ளி, காத்தவராயன், பூதத்தம்பி, வாலிவதை, பக்தநந்தனார், பாசத்திற்கோர் பரதன், பவளக்கொடி போன்ற புராண நாடகங்களிலும், வேள்வி, மேற்கில் ஓர் உதயம் போன்ற சமூக நாடகங்களிலும் நகைச்சுவை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 139-140