ஆளுமை: இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 11 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= இராஜேஸ்வரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜேஸ்வரி
தந்தை திருஞான சம்பந்தம்பிள்ளை
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1955.06.05
இறப்பு --
ஊர் யாழ். வண்ணார் பண்ணை
வகை பழைய மாணவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு யாழ். வண்ணார் பண்ணையில் பிறந்தவர் . தந்தை திருஞான சம்பந்தம்பிள்ளை, தாயார் மகேஸ்வரி திருமதி இராஜேஸ்வரி அவர்கள் யாழ். வண்ணார் பண்ணையில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் கற்றவர். இராஜேஸ்வரி நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் 16 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர். யாழ் கல்வித்திணைக்களம் இவருக்கு அதிபர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. யாழ். பல்கலைக்கழகத்திலே மேலதிகப் படிப்பாகக் கற்று M.A பட்டத்தைச் சிறப்பாகப் பெற்றுக் கொண்டார். பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரியில் ஆறு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார். இரண்டு வருடங்கள் யாழ். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார். இராஜேஸ்வரி அவர்களின் கணவர் வடமராட்சியைச் சேர்ந்த திரு. S. ஜெகானந்த குரு. இவர் ஒரு விஞ்ஞானப் (B.Sc.) பட்டதாரி. இவரும் இராஜேஸ்வரியின் வீணை கற்றலுக்கு உந்துசக்தியாக இருந்துள்ளார். இவர் யாழ். இந்துக் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

இவர் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றபின் இவர் கணவருடன் கொழும்பைத் தமது வாழ்விடமாக்கிக் கொண்டனர் அன்புடனும் அடக்கத்துடனும் பழகும் திருமதி ஜெகானந்தகுரு, எழுத்தாற்றல் பேச்சாற்றல், நிர்வாகத்திறமை கொண்டவர். இவர் ஒரு வீணை ஆசிரியருமாவார். இவர் இலங்கை வானொலியில் தேசிய சேவையில் ஆற்றிய உரைகள் பிரசித்தம் பெற்றவை. வீணை, ஆன்மிகம், சமய சிந்தனைகள், இலக்கியம் தொடர்பாகப் பல உரைகளை ஆற்றியுள்ளார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில இணைந்து பணிபுரிந்து வரும் இவர் அங்கும் பல உரைகளை ஆற்றிவருகிறார். இவர் எழுதிய நூல்களாக (1) விழாக்களும் விரதங்களும் (2) நற்சிந்தனைகள்,(3) சிவனார் திருவிளையாடல் (4) நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும் என்பனவாம். இவற்றுள் முதல் மூன்றும் சமயம் சார்ந்த நூல்களாகும். லௌகீகம் சாந்த நூலாக 'நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாக வேண்டும்' என்ற நூல் பற்றி இங்கு குறிப்பிடுதல், அவரது மானுடம் மேன்மையுற வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமையும். 'நாம் எவ்வண்ணம் வாழ்ந்தாகவேண்டம் என்ற தலைப்பின் கீழ் இவர் வெளிக் கொணர்ந் துள்ள இந்த நூலின் விடயப்பரப்பு உண்மை யிலேயே எல்லோரும் பின்பற்றி தம் வாழ்வில் வெற்றி நடைபோடும் வண்ணம் அமைந்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. அம்மையார் அவர்களின் பொது நோக்கம் கொண்ட பார்வை போற்றுதற்குரியது, வரவேற்கத்தக்கது. இந்நூ லின் தலைப்பே நல்லவற்றை அம்மையார் வலியுறுத்தம் பாங்கினை காட்டி நிற்கிறது. அதாவது நாம் எவ்வண்ணம் வாழவேண்டும் என்று குறிப்பிடாது வாழ்ந்தாகவேண்டும் எனக் குறிப்பிடுவதனூடாக அவரின் ஆணித்தரமான கூற்று எம் மனதில் பதிவினை ஏற்படுத்துவதில் சாலச்சிறந்ததாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வரும் தமது வாழ்க்கையின்போது கடைப் பிடித்தாக வேண்டிய முக்கிய விடயங்கள் இரத்தினச் சுருக்கமாக செறிவான தன்மையில் சகலரும் புரிந்து தெளிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் எழுத்துருவில் வடித்திருக்கும் தன்மை அவர் வாழ்க்கையின் நிழலாக லாகவே அமைந்து எமக்கெல்லாம் வழிகாட்டலாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. எப்படியும் வாழ்ந்து விடலாம் என் றெண்ணி வாழ்ந்துவரும் ஒரு சிலருக்கு இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் நாசூக்காக நெறிப்படுத்தும் இந்நூல் எல்லோ ருக்கும் குறிப்பாக எமது இளைய தலைமுறை யினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.