ஆளுமை:முபாறக், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:45, 12 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் மஜீத் முபாறக்
தந்தை அப்துல் மஜீத்
தாய் கதீஜா
பிறப்பு 1959.08.08
ஊர் கல்முனை, அம்பாறை
வகை எழுத்தாளர், கவிஞர்
புனை பெயர் கல்முனை முபாறக்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கல்முனை முபாறக் அவர்கள் (பி.1959.08.08) கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக்குடியைச் சேர்ந்த கல்முனைக்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத், கதீஜா தம்பதியினரின் புதல்வராக 1959.08.08ஆம் திகதி பிறந்தார். முபாறக் கல்முனை ஸாஹிராக் கல்லூரி, அட்டாளைச்சேனை அரபிக் கல்லூரி, மகரகமை கபூரியா அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். ‘கல்முனை முபாறக்' எனும் பெயரில் எழுதிவரும் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

'மெளலவி' பட்டம் பெற்றுள்ள இவர், அரபு மொழியில் டிப்ளோமா பாடநெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இமாம் முஹம்மட் சுஊத் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மூலம் பத்திரிகைத்துறைக்கான B.A. பட்டம் பெற்றுள்ளார். அரபு மொழி மூலமாக பத்திரிகைத்துறையில் B.A. பட்டம் பெற்றுள்ள ஒரே இலங்கைப் பத்திரிகையாளர் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1974ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தாலும் கூட இவரின் முதலாவது ஆக்கம் சிறுகதையாக 1976ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது.

இதே காலகட்டத்தில் தினகரன் பத்திரிகையில் மர்ஹம் எச்.எம்.பி.மொஹிடீன் நடத்திவந்த 'அபியுக்தன் பகுதியில், "சுரண்டல்" எனும் தலைப்பிலான முதல் கவிதையும் இடம்பெற்றுள்ளது. அன்றிலிருந்து 15க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கு மேற்பட்ட கவிதை, கட்டுரைகளையும் தினகரன், சுடர், மாணிக்கம், எழுச்சிக்குரல், நவமணி போன்ற பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் பல்வேறு சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார்.

இவரின் சிறுகதைகளும், கவிதைகளும் சமூக எழுச்சியை தூண்டக்கூடிய அதேநேரம், சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடநம்பிக்கைகளைக் களையக்கூடிய கருத்துகளை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இவரால் இதுவரை ஆறு நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. அந்நூல்கள் “ஓர் இஸ்லாமியனின் பார்வையில் தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத்" (இந்நூலின் முதலாம் பதிப்பு 1985 இலும், இரண்டாம் பதிப்பு 1992ம் ஆண்டிலும் வெளிவந்தன, ஒரு மெளலவி விலை போகின்றான் (சிறுகதைத்தொகுதி(1991), ஹில்று நபி இன்னும் வாழ்கின்றாரா? (1994), பெண்களுக்கு மட்டும் (1991), தொழுகையில் ஓதும் துஆக்கள் (1996), முஸ்லிம் தேசத்தின் விடுதலையை நோக்கி (2004) போன்றனவாகும்.

இவர் ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையில் 1976ம் ஆண்டில் 'மின்னொளி' எனும் பெயரில் கவிதைச் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டார். பின்பு 1983ம் ஆண்டுமுதல் 1987ம் ஆண்டு வரை 'அல்ஜஸீரா’ எனும் மாதப்பத்திரிகையையும், 1994ம் ஆண்டுமுதல் 1996ம் ஆண்டு வரை 'தினமதி' எனும் மாதப் பத்திரிகையையும் வெளியிட்டார்.

இவர் முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவராகக் கடமையாற்றியவர். முஜீதாவின் அன்புக் கணவராவார். இத் தம்பதியினருக்கு முஜாஹித், நுஸ்ஹா, ஹனான், ஸாஹித், முர்ஹீத், முஸ்னத், ரீஹா ஆகிய ஏழு பிள்ளைகள் உள்ளனர்.


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முபாறக்,_ஏ._எம்.&oldid=616826" இருந்து மீள்விக்கப்பட்டது