ஆளுமை:முருகேசு, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு
தந்தை கார்த்திகேசு
தாய் -
பிறப்பு 1933
ஊர் கிளிநொச்சி, கண்டாவளை
வகை நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, கார்த்திகேசு (1933 -) கிளிநொச்சி, கண்டாவளை வண்ணாபிட்டியில் ஆவரஞ்சாட்டியில் வாழ்ந்து வரும் நாடக கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் நான்காம் வகுப்பு வரை கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கற்றார்.

இவரது கலைவாழ்வு பவளக்கொடி நாடகத்தில் அருச்சுணனாக நடித்ததை தொடர்ந்து ஆரம்பமானது. தொடர்ந்து கொம்படியம்மன், கொக்கு இறகு கட்டிப்பிள்ளையார், கோணங்குளம் கற்பகபிள்ளையார், மல்லிகை அம்மன் ஆகிய ஆலயங்களின் நாடக ஆற்றுகைகளில் நடித்துள்ளார். இவர் அல்லி அருச்சுணா, சத்தியவான் சாவித்திரி, வரத மனோகரி போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் விவசாயத்தை செய்தொழிலாக மேற்கொண்டார். இவர் பல பிரதேச ஆலயங்களில் ஓதுவராக பணியாற்றியுள்ளார். இவர் தனிக்குற்றெழுத்திடாத ஓலை சுவடிகளில் பழைமையான தூய இலக்கணரி வடிவங்களை நேர்த்தியாக புரிந்து வேகமாக வாசிக்கும் புலமையாளர் ஆவார்.

இவர் 2013 இல் 'கலை ஒளி' விருதினையும், 2014 இல் 'கலைக்கிளி' விருதினையும் பெற்றார். 2014 இல் கலாசார அலுவல் திணைக்களத்தால் கலஞருக்கான தேசிய விருதான 'கலாபூசண' விருதினையும் பெற்றார்.