ஆளுமை:ஏழுமலைப்பிள்ளை, வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஏழுமலைப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏழுமலைப்பிள்ளை
தந்தை வல்லிபுரம்
தாய் பாக்கியம்
பிறப்பு 1953.11.05
இறப்பு -
ஊர் கிளிநொச்சி, மலையாள்புரம்
வகை பல்துறைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏழுமலைப்பிள்ளை, வல்லிபுரம் (1953.11.05 -) கிளிநொச்சி, மலையாள்புரத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பாக்கியம். இவரது ஆரம்பக் கல்வி மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தார் அக்கல்லூரியில் தரம் உயர் கல்வியை ஆங்கில பிரிவாக தரம் உயர்த்தப்பட்ட போது அங்கேயே கற்றுக்கொண்டார். உயர்தரத்தில் அரசியல்,வரலாறு,இலக்கியம் மூன்று பிரிவிலும் திறமையை பெற்றார் . அக்கால போர்ச்சூழல் காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பினை மறுத்தார்.

பாடசாலை ஆண்டு விழாக்களில் மேடையேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், சாம்ராட் அசோகன்,ஓதெல்லோ, வெனிஸ் நகர வணிகன் ,மார்க் அன்ரனி ஆகியவற்றில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர் வெனிஸ் நகர வணிகன் வட்டார நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

1969இல் ஐநா சபையின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பேச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் . காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றம், மாவிட்டபுரம் முத்தமிழ்க் கலை மன்றம், மயிலிட்டி இலங்கேஸ்வரன் நாடக மன்றம், டெல்லி ஒரு நாடக மன்றம், ,கட்டுவன் பாலர் ஞானோதயா நாடக மன்றம் ,மட்டக்களப்பு காரைதீவு கலை ஒன்றியம் போன்ற நாடக மன்றம் இணைந்து கலைஞர் செயற்பட்டார். தண்ணீரும் சுடும், பாஞ்சாலி சபதம், நீலக்கல் ,வன்தொண்டன், ஏன்இந்த அவலம், இரு ஜீவன்கள், தனிமரம் ,மகுடபங்கம், கடமை ,கலையும் கண்ணீரும், நடுகல், மனோகரா ,சாக்ரடீஸ், எல்லாளன், பண்டாரவன்னியன், போன்றவை இவ்வாறு இவர் நடித்த நாடகங்கள் சிலவாகும்.