ஆளுமை:பஞ்சாட்சரம், சண்முகம்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:01, 13 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சரம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1943.07.15
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாட்சரம், சண்முகம் (1943.07.15 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர், விஷக்கடி வைத்தியர். இவரது தந்தை சண்முகம். இவர் அரச விற்பனை அபிவிருத்தி திணைக்களத்தில் கடமைபுரிந்து ஓய்வு பெற்றதுடன் சிறுவயது முதல் இசைப் பாடலில் ஆர்வம் கொண்டு விளங்கினார். இவர் அரியாலை சிறீ கலைமகள் நிலையத்தில் வருடாவருடம் நடைபெற்று வரும் கதம்ப நிகழ்ச்சிகளில் பாடல் இசைத்து வந்தவர்.

இவர் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிகளின் ஆலய உற்சவ காலத்தில் பஜனை, பண்ணிசைப் பாடல்கள் பாடியமைக்காக ஆலய பிரதமக் குருக்கள் ஐயப்ப தாசனால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2010 ஆம் ஆண்டு இசைமாமணி என்னும் பட்டத்தை வழங்கிப் பொன்னடை போர்த்திக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 164
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 191