ஆளுமை:பேரின்பநாயகி, சிவகுரு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரின்பநாயகி, சிவகுரு
பிறப்பு 1950.05.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரின்பநாயகி, சிவகுரு (1950.05.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவர் பத்மலிங்கம், பாலசிங்கம், வேலாயுதம்பிள்ளை, மகேஸ்வரி, குலபூசணி, நமசிவாயம், ராதா ஆகியோரிடம் இசைக் கல்வியையும் லீலா ஆறுமுக ஐயர், வீரமணி ஐயா ஆகியோரிடம் நடனக் கல்வியையும் கற்றார்.

யாழ்ப்பாண விக்னேஸ்வராக் கல்லூரியிலும் திரு இருதயக் கல்லூரியிலும் மாலை நேர நடன வகுப்புக்களை நடத்தி பல நிகழ்வுகளை மேடையேற்றியுள்ள இவர், 2003 ஆம் ஆண்டிலிருந்து குருஷேஸ்திரம் என்னும் நடனப் பள்ளியைத் தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார். இவருக்குக் கலைக்கதிர் என்ற பட்டமும் சிறந்த நட்டுவாங்க நடன ஆசிரியர் என்ற விருதும் கிடைத்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 229-230