ஆளுமை:சிவக்கொழுந்து, கிட்டினபிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:37, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவக்கொழுந்து |
தந்தை | கிட்டினபிள்ளை |
பிறப்பு | 1933.06.05 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவக்கொழுந்து, கிட்டினபிள்ளை (1933.06.05 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிட்டினபிள்ளை. இவர் திக்கம் முருகேசு அண்ணாவியார், தும்பளை ஏரம்பு அண்ணாவியார், தாமர் அண்ணாவியார் போன்றோரிடம் தனது கலையைப் பயின்று 1955 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
இவர் ஆலயங்களிலும் பல இடங்களிலும் பவளக்கொடி, மார்க்கண்டேயர், அரிச்சந்திரா, காத்தவராயன், சிந்தாமணி ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். மேலும் வடமராட்சி வடக்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையால் 25 வருடக் கலைச்சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 160