ஆளுமை:யாமினி, சிவராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:57, 28 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யாமினி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாமினி
தந்தை சிவராமலிங்கம்
தாய் சிவநேசமணி
பிறப்பு 1969.09.03
இறப்பு -
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாமினி,சிவராமலிங்கம் (1969.09.03) வவுனியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவராமலிங்கம்; தாய் சிவநேசமணி. தனது ஆரம்பக்கல்வியை வவுனியா சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தியிலும், பின்னர் வவுனியா மகாவித்தியாலயத்திலும் கற்றார். யாமினி சிவராமலிங்கம் 1983ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்தார். 1984ஆம் ஆண்டு நிலவே நீ மயங்காதே' (நாவல்) வெளியீட்டின் மூலம் வவுனியா மாவட்டத்தில் முதல் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் யாமினி சிவராமலிங்க்கு உண்டு. கவிதை, சிறுகதை என ஈழத்து இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இவர் செய்து வருகிறார்.அம்பாளுக்காகவும் விநாயகருக்காகவும் எழுதப்பட்ட `சக்திப்ரதாயினி', 'யாதுமாகி நின்றாய்' ஆகிய இரு பக்திக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். வவுனியா இலக்கிய மலரான "கலைமருதத்தில்" பிரசுரமாகிய "தாலி" என்ற சிறுகதையில் விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கின்ற இந்தச் சமூகத்தின் மீதான தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ள எழுத்தாளர், `துவாரகா' என்கிற சிறுகதையில் மதவெறியைச் சாடியிருக்கிறார்.தனது எழுத்தின் ஊடாக பெண் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூகத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் யாமினி சிவராமலிங்கம்.


இவற்றையும் பார்க்கவும்