ஆளுமை:பிரேமிளா, பிரதீபன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:14, 22 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிரேமிளா, ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிரேமிளா, பிரதீபன்
தந்தை செல்வராஜா
தாய் சிவகாமி
பிறப்பு 1984.03.26
இறப்பு -
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரேமிளா, செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் கற்றார்.இளங்கலைமானி பட்டத்தை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் கற்கைநெறியை தேசிய கல்வி நிறுவத்திலும் கற்றுள்ளார். இவர் ஆசிரியராக தற்பொழுது பணிப்புரிந்து வருகிறார். 2005ஆம் ஆண்டு இவரின் சலனம் எனும் கவிதை தினமுரசு நாளிதழில் முதலில் பிரசுரமானதாக தெரிவிக்கும் எழுத்தாளர், பீலிக்கரை எனும் சிறுகதை ஊடாக ஞானம் சஞ்சிகையின் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி தனது எழுத்துப் பயணத்தை தொடர்வதாகத் தெரிவிக்கிறார். 2007ஆம் ஆண்டு பீலிக்கரை எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தகப் பூங்கா ஊடாகவும், 2010ஆம் ஆண்டு பாக்குபட்டை எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாக வெளியீடு செய்துள்ளார். அத்துடன் இவரின் கட்டுபொல் நாவல் கொடகெ வெளியீடாக வெளிவந்துள்ளது.

இவர் ஆரம்பத்தில் சுதந்திரனில் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் போன்ற ஈழத்து இதழ்களிலும் எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் போன்றன இவரது நூல்கள்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்