ஆளுமை:மகாலிங்கம், என். கே

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:56, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மாகாலிங்கம், என். கே., ஆளுமை:மகாலிங்கம், என். கே என்ற தலைப்புக்கு நகர்த்த...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், என். கே புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் அறுபதுகளிலிருந்து இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பைச் சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருகின்றார். பூரணி மகாலிங்கம் என எழுத்துலகில் அறியப்படுகின்றார்.

இவர் படைப்புக்களில் 'தியானம்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'உள்ளொளி' என்ற கவிதைத் தொகுப்பும் 'சிதைவுகள்' என்ற மொழிபெயர்ப்பு நாவலும் சிறந்தவையாகும். இவரது சிதைவுகள் நாவல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் 'சினுவா ஆச்சிபியின்' புகழ்பெற்ற நாவலான 'Things Fall Apart' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

இவர் இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புப்போர் பற்றி ஆங்கிலத்தில் ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் எழுதியுள்ள 'ஈழம் சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்' என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 246

வெளி இணைப்புக்கள்