ஆளுமை:நாகேசு, சி. க.
பெயர் | நாகேசு |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகேசு, சி. க புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். கொழும்பில் பொரளையிலும் நாரஹேன்பிட்டியிலும் தொழில் நிலைய அதிபராய் இருந்த இவர், புங்குடுதீவு முதலாம் வட்டார மூத்தநயினார்புலம் வரசித்திவிநாயகர் ஆலயத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதோடு கோயில் நிர்வாக சபையின் பொருளாளராகவும் விளங்கினார்.
இவர் புங்குடுதீவு கிராம சபையின் முதலாம் வட்டார அங்கத்தவராக இருந்து பாகுபாடு காட்டாது பணி செய்தார். அத்தோடு 1970 ஆம் ஆண்டு புங்குடுதீவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல வழிகளிலும் உதவினார்.
பெருங்காடு கிராம முன்னேற்றச் சங்கம், ஐக்கிய நாணயச் சங்கம், சைவ கலா சங்கம் முதலியவற்றில் அங்கத்தவராகிப் பணியாற்றியதுடன் தனது சொந்தச் செலவில் தம்பனை வீதியை அமைத்துக் கொடுத்தார். அத்துடன் இவர் தமிழ் இனத்துக்காகத் தந்தை செல்வாவுடன் இணைந்து சத்தியாக்கிரகப் போராட்டங்களிலும் பங்குகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 268