ஆளுமை:தேவராசா, மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:28, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவராசா
தந்தை மாணிக்கம்
பிறப்பு 1949.09.16
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, மாணிக்கம் (1949.09.16 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். தனது 12 ஆவது வயதிலிருந்து நாடகத்துறையில் கடமையாற்றி வரும் இவர், அளவெட்டியில் பாரதி கலைஞர் நாடக மன்றத்தினை இயக்கி வந்துள்ளார்.

இவர் இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த ஆற்றலுடையவராகி அக்கம்மா, வடக்குத் தெற்கு, சண்டியன் தம்பிப்பிள்ளை, நீர்க்குமிழி, சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, பூதத்தம்பி, வள்ளி திருமணம், ஞானசவுந்தரி, காத்தவராயன் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது திறமைக்காக இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி என்ற பட்டத்தையும் வலிகாமம் வடக்கு கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 184