ஆளுமை:லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:திலகநாயகம் போல், லயனல், [[ஆளுமை:லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேச...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திலகநாயகம் போல்
தந்தை வல்லிபுரம் முருகேசு போல்
தாய் மார்கிரட் தங்கமலர்
பிறப்பு 1941.07.06
இறப்பு 2009.12.05
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல் (1941.07.06 - 2009.12.05) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம் முருகேசு போல்; தாய் மார்கிரட் தங்கமலர். புனித சாள்ஸ் கல்லூரியிலும் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பயி்ன்ற இவர், 1961 இல் தென்னிந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கல்வி பயின்றார். இவர் சங்கீத பூஷணம் பட்டம் பெற்ற முதல் யாழ்ப்பாணத்தவராகக் கருதப்படுகின்றார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இசையாசிரியராகப் பணியாற்றிய இவர், பதவி உயர்வுபெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதோடு யாழ். பல்கலைக்கழகத்தின் வெளிவாரி விரிவுரையாளராகவும் பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை வானொலியில் இசைக்கச்சேரிகளை வழங்கியதோடு பல மெல்லிசைப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், ரூபவாகினி தொலைக்காட்சி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தரக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார். இவர் தனது இசைக் கச்சேரிகளை இலங்கையிலும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்கியிருக்கின்றார்.

இவருக்கு சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 171-174
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 01-20
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 70