ஆளுமை:ஜெயராஜ், இலங்கைராஜா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:43, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராஜ்
தந்தை இலங்கைராஜா
தாய் குலமணி
பிறப்பு 1957.10.24
ஊர் நல்லூர்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராஜ், இலங்கைராஜா (1957.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை இலங்கைராஜா; தாய் குலமணி. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவி கம்பன் இலக்கிய விழாக்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வருடந்தோறும் நிகழ்த்தி வருகின்றார்.

இவர் யாழ்ப்பாணத்தில் போர்ச் சூழல் நிலவிய காலத்தில் (1975- 1995 வரை) ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்களையும் பட்டிமண்டபங்களையும் இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுதுடன் 1995 இன் பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும் நாட்டிய விழாக்களையும் அங்கும் நிகழ்த்தினார். இவர் 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக இருந்து யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கம்பன் விழாக்களை நடாத்தி வருவதுடன் 2005 ஆம் ஆண்டு கொழும்பில் கம்பன்கோட்டத்தில் ஐஸ்வரியலட்சுமி கோயிலை நிறுவினார். இவர் அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

கம்பராமாயணத்தில் சிறந்த ஆளுமை உடைய இவருக்கு யாழ்ப்பாணம், திருநெல்வேலி தலங்காவில் ஆலயத்தினர் "கம்பவாரிதி" என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 228-231