ஆளுமை:செல்வரத்தினம், கனகசபை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:46, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வரத்தினம்
தாய் கனகசபை
பிறப்பு நாகம்மா
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர், நாடக இயக்குனர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், கனகசபை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், நாடக இயக்குனர், பேச்சாளன். இவரின் தந்தை கனகசபை; தாய் நாகம்மா. இவர் தனது கல்லூரிப் படிப்பைச் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் பயின்றார்.

இவர் 1963 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் பல நாடகங்களை புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவரது ஒரு நாடகத்தில் மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என்.நவரெத்தினம் முக்கிய பங்கேற்று நடித்ததோடு, அந்த நாடகத்தை நேரடியாகப் பார்த்த தந்தை செல்வா இவருக்குக் கலைஞர் செல்வம் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 187-188