ஆளுமை:செல்வநாயகம், சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகம்
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வநாயகம், சோமசுந்தரம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட விரிவுரையாளர். இவரது தந்தை சோமசுந்தரம். ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிப் புவியியற் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறித் தான் படித்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.

இவர் சிலகாலம் நைஜீரியா அகமது பொல்லோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதுடன் 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது புவியியற்துறைப் பேராசிரியராகவும் பின்பு தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் தென்மராட்சித் தென்னை அபிவிருத்திப் பணிகளுக்குப் புவியியற்துறை ஆலோசகராக விளங்கியதுடன் தென்மராட்சிப் பகுதியில் சமூக பொருளாதார ஆய்வொன்றினை மேற்கொண்டு பூர்வாங்க அறிக்கையை எழுதியுள்ளார். இவர் யாழ். பல்கலைக்கழக மன்றங்கள் மூலம் தமிழுக்கும் சைவத்துக்கும் பணிகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 174