ஆளுமை:சுப்பையாபிள்ளை, சந்தனமுத்து

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:35, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பையாபிள்ளை
தந்தை சந்தனமுத்து
தாய் காளிமுத்து
பிறப்பு 1907
இறப்பு 1972.03.06
ஊர் இந்தியா, திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பையாபிள்ளை, சந்தனமுத்து (1907 - 1972.03.06) இந்தியா, திருநெல்வேலியைச் சேர்ந்த பல்லியக்கலைஞர். இவரது தந்தை சந்தனமுத்து; இவரது தாய் காளிமுத்து. இவர் தனது மூத்த சகோதரனான பூதப்பாண்டியிடம் மிருதங்கக் கல்வியை கற்க ஆரம்பித்து வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகியவற்றையும் கற்றார். இளமைப்பருவத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இசை ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், ஈழத்தின் பல பாகங்களில் இசையரங்குகளில் மிருதங்கம், கடம் போன்ற பக்கவாத்தியங்களை வாசித்துள்ளார்.

இவருடைய காலத்தில் இருந்த லய வித்துவான்களான மிருதங்கமணி எம்.என்.செல்லத்துரை, சங்கீதபூஷணம் ஏ.எஸ்.இராமநாதன், குமுக்கா கணபதிப்பிள்ளை, பாக்கியநாதன், நாச்சிமார் கோவில் கணேசபிள்ளை ஆகியோர்களுடன் இணைந்து பக்கவாத்தியங்கள் வாசித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 35-38