ஆளுமை:சுப்பிரமணியம், அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம்
தந்தை அருளம்பலம்
பிறப்பு 1913.04.10
இறப்பு 2007.07.15
ஊர் புங்குடுதீவு
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், அருளம்பலம் (1913.04.10- 2007.07.15) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். இவரது தந்தை அருளம்பலம். புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயத்தில் நீண்ட காலம் அதிபராகக் கடமையாற்றிய இவர் அப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவராகவும் புங்குடுதீவின் கல்வி, சமய, சமூகச் சேவைகளில் முன்னின்று உழைத்தவராகவும் காணப்பட்டார்.

தம்பிமுத்து ஆசிரியர் என்ற புனைபெயரில் புகழ்பெற்ற இவர், புங்குடுதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து அக்கோவிலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். இவர் புங்குடுதீவில் இணக்க சபை செயற்பட்டுக் கொண்டிருந்த பொழுது அதன் தலைவராக இருந்து கிராமமக்கள் பலரின் சிக்கல்களை நீதியாகத் தீர்த்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200-200A